ஜூலை 20 முதல் தமிழகத்தில் 15 லட்சம் லாரிகள் இயங்காது

கோவை: டீசல் விலை உயர்வு சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரி வரும் ஜூலை மாதம் 20 தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை: டீசல் விலை உயர்வு சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரி வரும் ஜூலை மாதம் 20 தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் இணை செயலாளர் கே.எஸ். கலியபெருமாள் கூறுகையில், "நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகும் டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதே நேரம் ஆறு மாத காலத்திற்கு ஒரு முறை சுங்க வரி கட்டணமும் உயர்கிறது. காப்பீடு நிறுவனங்களும் விலைகளை உயர்த்தியுள்ளன. இது போன்று அனைத்து வகை கட்டணங்களும் உயர்ந்துள்ளதால், லாரிகளை இயக்க முடியாமல் சுமார் 25 சதவீதம் பேர் இந்த தொழிலை விட்டே சென்று விட்டனர்.

லாரிகள் சீராக இயங்கி இந்தியா முழுவதும் பொருட்களை கொண்டு போய் சேர்த்தால் தான் இந்தியாவின் பொருளாதாரம் சீராக இருக்கும். லாரி வாடகை உயர்த்தினால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயரும். அண்டை மாநிலமான கார்நாடகவில் டீசலுக்கான உள்ளூர் வரி ரூ. 3.50 குறைக்கப்பட்டுள்ளன. அதே போல் தமிழகத்திலும் இது குறைக்கப்பட வேண்டும்.

ஜூலை 20-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். சுமுகமான தீர்வு ஏற்பட்டால் போராட்டம் கைவிடப்படும், இல்லை என்றால் போராட்டம் தொடரும்." என்றார்.

கோவையில்

கோவையில் மட்டுமே சுமார் 5 லட்சம் லாரிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் வணிகங்களுக்கு இயக்கப்படுக்கின்றன. இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றால் லாரி தொழிலை நம்பியுள்ள ஓட்டுனர்கள், கிளினர்கள், கூலி தொழிலாளிகள் வேலை இன்றி பாதிக்கப்படுவார்கள்.

இது குறித்து லாரி ஒட்டுனர் மாரிமுத்து கூறுகையில், "லாரி ஒட்டுவதில் ஏற்கனவே மாதம் 15 நாட்கள் தான் வேலை உள்ளது. விலை வாசி உயர்வால் நாங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளோம். அது மட்டுமல்ல வேலை நிறுத்தம் தொடங்கினால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்." என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் குப்புராஜ் கூறுகையில், "மக்களை பாதிக்கும் முன் லாரி உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கனவே பெரும்பாலான பொருட்களில் விலை வாசி உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்." என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...