தூத்துக்குடி: தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஸ்டாலின், கமல், வைகோ உள்ளிட்டோர் மீது பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஸ்டாலின், கமல், வைகோ உள்ளிட்டோர் மீது பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், 144 தடை உத்தரவு உள்ள நிலையில், தடையை மீறி மருத்துவமனைக்கு சென்றதாக ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்ட 64 பேர் மீது, ஐபிசி 143, 188, 153 (ஏ) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், 144 தடை உத்தரவு உள்ள நிலையில், தடையை மீறி மருத்துவமனைக்கு சென்றதாக ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்ட 64 பேர் மீது, ஐபிசி 143, 188, 153 (ஏ) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.