அகில இந்திய கூடைப்பந்து போட்டி கோவையில் 27-ல் தொடக்கம்

கோவை: அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் வரும் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை: அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் வரும் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 53-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆண்களுக்கான போட்டிகள் மற்றும் பதினேழாவது சி.ஆர்.ஐ., பம்ப் கோப்பை பெண்களுக்கான போட்டிகள் வரும் 26-ம் தேதி தொடங்கி வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்த இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

இந்த போட்டிகளில் பஞ்சாப் போலீஸ், புதுடில்லி-இந்திய விமானப்படை, சென்னை- வருமான வரி அணி, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், டெல்லி இந்தியன் ரயில்வே அணி, பெங்களூரு ஏ.சி.எஸ், புது டெல்லி வருமான வரி அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து அணி போன்ற இந்தியாவின் தலைசிறந்த 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

பெண்கள் பிரிவில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே, திருவனந்தபுரம் கேரள போலீஸ், ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே, சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ், மைசூர் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல், திருவனந்தபுரம் கேரள மின்வாரியம், தமிழ்நாடு ஜூனியர்ஸ் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து அணி பங்கேற்கவுள்ளன.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ. 50,000 மற்றும் டாக்டர் மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறத்தவறிய இரு அணிகளுக்கு ரூ. 15,000-மும். நன் நடத்தைக்கு தேர்வு செய்யப்படும் அணிக்கு ரேணுகா ராமநாதன் நினைவு விருதும் வழங்கப்படுகிறது.

பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ. 50,000 மற்றும் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் சுழற்கோப்பையும்,  இரண்டாம் பரிசாக ரூ. 25,000 மற்றும் சுழற்கோப்பையும், அரையிறுதி போட்டியில் வெற்றி பெற தவறிய இரு அணிகளுக்கு தலா பத்தாயிரம் மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்படுகிறது.

இப்போட்டிகள் வரும் 26-ம் தேதி தொடங்கி, வரும் 31-ம் தேதி வரை வ.உ.சி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. 31-ம் தேதி மாலை நடைபெறும் இறுதிப் போட்டிக்குப் பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கிறார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...