இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை ஏற்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை ஏற்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நடிகர் ஹிருத்திக் ரோஷன், கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு 'பிட்னெஸ் சேலஞ்ச்' சவால் விடுத்தார். இடைவிடாது 10 முறை 'புஷ் அப்' செய்து வீடியோவை வெளியிட்டு, தம்மை போல் செய்ய முடியுமா எனவும் சவால் விடுத்திருந்தார்.
இந்த சவாலை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வீரர் கோலி, தான் உடற்பயிற்சி செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மோடி, மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோர் தன்னை போல் பண்ண முடியுமா எனவும் 'பிட்னெஸ் சேலஞ்ச்' சவால் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், விராத் கோலியின் சவாலை ஏற்பதாகவும், விரைவில் தனது ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட உள்ளதாகவும் இன்று பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.