டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தற்போது வரை 13 பேர் உயிரிழந்தனர். கலவரம் மேலும் பரவாமல் தடுப்பதற்காக ஐந்து நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. வன்முறை எதுவும் பரவாமல் தடுப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சூழலில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் எனவும், தமிழக போலீசார் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினால் உண்மை வெளிவராது எனவும் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சபரீஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தற்போது வரை 13 பேர் உயிரிழந்தனர். கலவரம் மேலும் பரவாமல் தடுப்பதற்காக ஐந்து நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. வன்முறை எதுவும் பரவாமல் தடுப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சூழலில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் எனவும், தமிழக போலீசார் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினால் உண்மை வெளிவராது எனவும் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சபரீஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்.