'ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு': தூத்துக்குடி கலவரத்தில் போலீசாரின் அதிர்ச்சிகர வீடியோ

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது போலீஸ் அதிகாரி ஒருவர், சக போலீசாரிடம் ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு எனப் பேசிய ஆடியோ வீடியோவில் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது போலீஸ் அதிகாரி ஒருவர், சக போலீசாரிடம் ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு எனப் பேசிய ஆடியோ வீடியோவில் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க, தடியடி நடத்திய போலீசார், உச்சகட்டமாக துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தினர். அதில், சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, போலீஸ் அதிகாரி ஒருவர், சக போலீசாரிடம் ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு எனப் பேசிய ஆடியோ வீடியோவில் பதிவாகியுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதேபோல, தூத்துக்குடியில் 2-வது நாளாக போலீசார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது, காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் பலியானார். அவரது உடலின் அருகே சென்ற போலீசார், ’நடிக்கிறான், நடிக்கிறான்’ என்று கூறினர். மற்றொரு போலீசார், ’ஏய் ரொம்ப நடிக்காதே போ’ என்று கூறினார். போலீசாரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...