தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது போலீஸ் அதிகாரி ஒருவர், சக போலீசாரிடம் ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு எனப் பேசிய ஆடியோ வீடியோவில் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது போலீஸ் அதிகாரி ஒருவர், சக போலீசாரிடம் ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு எனப் பேசிய ஆடியோ வீடியோவில் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க, தடியடி நடத்திய போலீசார், உச்சகட்டமாக துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தினர். அதில், சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, போலீஸ் அதிகாரி ஒருவர், சக போலீசாரிடம் ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு எனப் பேசிய ஆடியோ வீடியோவில் பதிவாகியுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, தூத்துக்குடியில் 2-வது நாளாக போலீசார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது, காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் பலியானார். அவரது உடலின் அருகே சென்ற போலீசார், ’நடிக்கிறான், நடிக்கிறான்’ என்று கூறினர். மற்றொரு போலீசார், ’ஏய் ரொம்ப நடிக்காதே போ’ என்று கூறினார். போலீசாரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க, தடியடி நடத்திய போலீசார், உச்சகட்டமாக துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தினர். அதில், சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, போலீஸ் அதிகாரி ஒருவர், சக போலீசாரிடம் ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு எனப் பேசிய ஆடியோ வீடியோவில் பதிவாகியுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, தூத்துக்குடியில் 2-வது நாளாக போலீசார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது, காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் பலியானார். அவரது உடலின் அருகே சென்ற போலீசார், ’நடிக்கிறான், நடிக்கிறான்’ என்று கூறினர். மற்றொரு போலீசார், ’ஏய் ரொம்ப நடிக்காதே போ’ என்று கூறினார். போலீசாரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.