தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா..?: பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்

கோவை: சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு கோவை பால் முகவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவை: சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு கோவை பால் முகவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற போலீசாரின் வெறியாட்டத்தை தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் சமூக வலைதளங்களின் வாயிலாக தங்களின் பாதிப்பை உலகறிய செய்து வருகின்றனர். ஊடகங்களையெல்லாம் தங்களின் மிரட்டல்களால் கட்டுப்படுத்தி, காட்டாட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு, தற்போது தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவைகளை முற்றிலுமாக முடக்கியிருப்பதாக அறிகிறோம்.

ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியைக் கண் முன்னே நடத்திக் கொண்டு, எமர்ஜென்சி காலகட்டத்தை நினைவூட்டும் விதமாக செயல்பட்டு வரும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கும் இணையதள சேவைகளை உடனடியாக வழங்கிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் நலனுக்கு எதிராக ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் நீண்ட காலமாக ஆட்சியில் நீடிக்க முடியாது என்பது வரலாறு கூறும் உண்மை. எனவே, மக்கள் விரோத அரசாக இருக்கும் அ.தி.மு.க., அரசு உடனடியாக மக்கள் நலனுக்கு ஆதரவான அரசாக மாற வேண்டும். இல்லையெனில், ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்க கடமைப்பட்டுள்ளோம், இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...