கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியினருக்கான வசதி அறிமுகம்

கோவை: கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா திறந்து வைத்தார்.

கோவை: கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மாநகர காவல் ஆணையர் கே.பெரியய்யா திறந்து வைத்தார்.



கடந்த 2015-ம் ஆண்டு நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு என சுகம்யா பாரத் அபியான் என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இத்திட்டத்தின் மூலம், அரசு மற்றும் பொதுக்கட்டிடங்களில் சக்கர நாற்காலியில் செல்வதற்கான வசதியை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டது. கோவையில் ஸ்வர்கா பவுண்டேசன் சார்பில் இத்திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பள்ளிகளில் அரசுப் பள்ளிகள், பொது கட்டிடங்களில் சக்கர நாற்காலியில் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.



கோவையை மையமாகக் கொண்டு செயல்படம் கட்டுமான நிறுவனமான விஸ்வநாதன் கன்ஸ்டிரக்சனுடன் இணைந்து இதுபோன்ற பணிகளை ஸ்வர்கா பவுண்டேசன் செய்து வருகிறது. இந்த நிலையில், கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்கப்பட்டது. இதனை காவல் ஆணையர் கே. பெரியய்யா பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஸ்வர்கா பவுண்டேசன் சார்பில் திறன்மிக்க மாற்றுத்திறனாளிகளின் மூலம் காவல் ஆணையர் அலுவலக ஊழியர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டன.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...