கோவை: லஞ்சம் பெற்ற வழக்கில் தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: லஞ்சம் பெற்ற வழக்கில் தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை துடியலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு வங்கியில் கடந்த 2008-ம் ஆண்டு வேலுச்சாமி (65) என்பவர் ஊழியராகப் பணியாற்றி வந்தார். அப்போது, விவசாயி பயிர் கடனுக்காக அடமானம் வைத்த நகையை திரும்பப் பெறுவதற்காக ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு கோவை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கி ஊழியர் வேலுச்சாமிக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கோவை துடியலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு வங்கியில் கடந்த 2008-ம் ஆண்டு வேலுச்சாமி (65) என்பவர் ஊழியராகப் பணியாற்றி வந்தார். அப்போது, விவசாயி பயிர் கடனுக்காக அடமானம் வைத்த நகையை திரும்பப் பெறுவதற்காக ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு கோவை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கி ஊழியர் வேலுச்சாமிக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.