கோவை: இந்தியாவிலேயே முதல்முறையாக 'சப்னா கியோஸ்' என்னும் தானியங்கி புத்தக விற்பனையகம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை: இந்தியாவிலேயே முதல்முறையாக 'சப்னா கியோஸ்' என்னும் தானியங்கி புத்தக விற்பனையகம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை ஆர்.எஸ். புரம் சப்னா புத்தக விற்பனையக கிளையின் 5-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்த தானியங்கி புத்தக விற்பனையகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சப்னா புத்தக விற்பனை நிலையத்தில் 5 லட்சம் தலைப்பில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த 5 லட்சம் புத்தகங்களில் தமது தேவைக்கு ஏற்றப் புத்தகங்கள் கிடைக்காத போது, இந்த கியோஸ்க் உதவுகிறது.

சப்னாகியோஸ்க் உலகில் உள்ள அனைத்து புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோருடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பயன்பாட்டில் உள்ள எண்ணில் அடங்காப் புத்தகங்களை நமது வாடிக்கையாளர்கள் எளிதில் பெற துணை புரிகிறது.

உலகில் உள்ள 2 கோடி புத்தகத் தொகுப்புடன் இணைக்கப்பட்ட தொடுதிரைத் தொழில்நுட்ப வசதி பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் கியோஸ்க் மூலம் பதிவு செய்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தங்கள் இல்லத்திற்கு வரும் வகையில் அல்லது சப்னா புத்தக விற்பனையகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

கோவை ஆர்.எஸ். புரம் சப்னா புத்தக விற்பனையக கிளையின் 5-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்த தானியங்கி புத்தக விற்பனையகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சப்னா புத்தக விற்பனை நிலையத்தில் 5 லட்சம் தலைப்பில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த 5 லட்சம் புத்தகங்களில் தமது தேவைக்கு ஏற்றப் புத்தகங்கள் கிடைக்காத போது, இந்த கியோஸ்க் உதவுகிறது.

சப்னாகியோஸ்க் உலகில் உள்ள அனைத்து புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோருடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பயன்பாட்டில் உள்ள எண்ணில் அடங்காப் புத்தகங்களை நமது வாடிக்கையாளர்கள் எளிதில் பெற துணை புரிகிறது.

உலகில் உள்ள 2 கோடி புத்தகத் தொகுப்புடன் இணைக்கப்பட்ட தொடுதிரைத் தொழில்நுட்ப வசதி பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் கியோஸ்க் மூலம் பதிவு செய்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தங்கள் இல்லத்திற்கு வரும் வகையில் அல்லது சப்னா புத்தக விற்பனையகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.