இந்தியாவில் முதல்முறையாக 'சப்னா கியோஸ்' தானியங்கி புத்தகநிலையம் கோவையில் அறிமுகம்

கோவை: இந்தியாவிலேயே முதல்முறையாக 'சப்னா கியோஸ்' என்னும் தானியங்கி புத்தக விற்பனையகம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை: இந்தியாவிலேயே முதல்முறையாக 'சப்னா கியோஸ்' என்னும் தானியங்கி புத்தக விற்பனையகம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை ஆர்.எஸ். புரம் சப்னா புத்தக விற்பனையக கிளையின் 5-ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இந்த தானியங்கி புத்தக விற்பனையகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சப்னா புத்தக விற்பனை நிலையத்தில் 5 லட்சம் தலைப்பில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த 5 லட்சம் புத்தகங்களில் தமது தேவைக்கு ஏற்றப் புத்தகங்கள் கிடைக்காத போது, இந்த கியோஸ்க் உதவுகிறது.



சப்னாகியோஸ்க் உலகில் உள்ள அனைத்து புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோருடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பயன்பாட்டில் உள்ள எண்ணில் அடங்காப் புத்தகங்களை நமது வாடிக்கையாளர்கள் எளிதில் பெற துணை புரிகிறது.



உலகில் உள்ள 2 கோடி புத்தகத் தொகுப்புடன் இணைக்கப்பட்ட தொடுதிரைத் தொழில்நுட்ப வசதி பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் கியோஸ்க் மூலம் பதிவு செய்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தங்கள் இல்லத்திற்கு வரும் வகையில் அல்லது சப்னா புத்தக விற்பனையகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...