தூத்துக்குடி கலவரம்: நீலகிரி பயணத்தை நிறைவு செய்து சென்னை புறப்பட்டார் ஆளுநர்

நீலகிரி: தூத்துக்குடியில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், நீலகிரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாலை சென்னை புறப்பட்டார்.

நீலகிரி: தூத்துக்குடியில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், நீலகிரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாலை சென்னை புறப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள கடந்த 21-ம் தேதி மாலை உதகைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்ற ஆளுநர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து வரும் ஜுன் 2-ம் தேதி வரை உதகையில் தங்கியிருந்து பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் தனியார் விழாவில் பங்கேற்க ஆளுநர் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடியில் நேற்று நடந்த கலவரம் 2-வது நாளாக இன்றும் நீடித்தது. இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை ஆளுநர் தனது குடும்பத்தாருடன் உதகை ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தார். தூத்துக்குடியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், ஆளுநர் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் இருந்து கோத்தகிரி வழியாக கார் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...