கோவை: ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான போராட்டத்தை அடுத்து கோவை வ.உ.சி., மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை: ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான போராட்டத்தை அடுத்து கோவை வ.உ.சி., மைதானத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஸ்டெர்லைட்க்கு ஆதரவாகவும் மற்றும் காவல் துறையைக் கண்டித்தும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பகுதியான வ.உ.சி., மைதானத்தில் நேற்று மாணவர்கள் சிலர் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி நின்றனர். அவர்களை கைது செய்த போலீசார் பின்னர், அவர்களை பிணையில் விடுவித்தனர்.
இந்த சூழலில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அந்த பகுதியில் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவல் வந்ததையடுத்து வ.உ.சி., மைதானம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் சிறப்பு காவல் ஆய்வாளர், காவலர் மற்றும் உர்க்காவல் படையினர் என்று 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வழியே செல்லும் வாகனங்களையும் போலீசார் சோதனைகள் செய்து வருகின்றனர்.


கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஸ்டெர்லைட்க்கு ஆதரவாகவும் மற்றும் காவல் துறையைக் கண்டித்தும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பகுதியான வ.உ.சி., மைதானத்தில் நேற்று மாணவர்கள் சிலர் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி நின்றனர். அவர்களை கைது செய்த போலீசார் பின்னர், அவர்களை பிணையில் விடுவித்தனர்.
இந்த சூழலில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அந்த பகுதியில் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவல் வந்ததையடுத்து வ.உ.சி., மைதானம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் சிறப்பு காவல் ஆய்வாளர், காவலர் மற்றும் உர்க்காவல் படையினர் என்று 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வழியே செல்லும் வாகனங்களையும் போலீசார் சோதனைகள் செய்து வருகின்றனர்.
