தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை தேவை என வழக்கறிஞர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் கூறி இருந்தது.
இதனையடுத்து 3 வழக்கறிஞர்கள் சேர்ந்து பொதுநல மனுவாக தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று பிற்பகல் விசாரித்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனை முடிந்த பிறகு மறுஉத்தரவு வரும் வரை பதப்படுத்தி வைக்க வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் மறு ஆய்வு குறித்து முடிவு செய்யப்படும், என உத்தரவிட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை தேவை என வழக்கறிஞர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் கூறி இருந்தது.
இதனையடுத்து 3 வழக்கறிஞர்கள் சேர்ந்து பொதுநல மனுவாக தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று பிற்பகல் விசாரித்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனை முடிந்த பிறகு மறுஉத்தரவு வரும் வரை பதப்படுத்தி வைக்க வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் மறு ஆய்வு குறித்து முடிவு செய்யப்படும், என உத்தரவிட்டனர்.