ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவலர்களை ஏவியது யார் என்ற உண்மை தெரிய வேண்டும் என மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவலர்களை ஏவியது யார் என்ற உண்மை தெரிய வேண்டும் என மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். அவர்களிடம் ஆறுதல் கூறிய பேசிய கமல், அவர்களின் துயரங்களை கேட்டறிந்த போது கண்கலங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கமல் பேசுகையில், "போன உயிர்களுக்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் ஈடாகாது. யாரையோ திருப்திபடுத்தவே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவலர்களை ஏவியது யார் என்ற உண்மை தெரிய வேண்டும்," என வலியுறுத்தினார்.
மேலும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் அளிப்பது முக்கியம் இல்லை அது குறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை நடத்தும் போது, அங்கு அனுபவம் உள்ள மருத்துவர்கள் அருகில் இருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.