ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சிசூடு: தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம், மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன.


தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அ.குமரெட்டியபுரம் மக்களின் போராட்டம் நேற்றுடன் 100-வது நாளை எட்டியது. எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் ஏராளமானோர் முற்றுகையிட முயன்றனர். அப்போது, இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், இது கலவரமாக மாறியது. போலீசார் மீதும், வாகனங்களை அடித்து நொறுக்கினர். உச்சகட்டமாக ஏராளமான வாகனங்களுக்கு தீயை வைத்தனர். இதனால், அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

இதனால், போலீசார் வன்முறையைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானர்கள். 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு தமிழகத்தில் கடும் கொந்தளிப்பையும், நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்துவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தாமல் தவிர்த்திருக்க முடியுமா என்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்து அறிக்கை அளிக்கமாறு கூறியுள்ளது. இதையடுத்து காவல்துறையிடம் உரிய விளக்கம் பெறப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசு அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் டிஜிபி.,க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...