கோவை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மற்றும் மாநில அரசை கோவையில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மற்றும் மாநில அரசை கோவையில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அரசின் இந்த போக்கை தமிழகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவை டாட்டாபாத் பகுதியில், பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மக்கள் அதிகாரம், த.பெ.தி.க., ம.தி.மு.க., வி.சி.க., புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "துப்பாக்கிச் சூடு என்பது திட்டமிட்ட படுகொலை. மான் சுட அனுமதி இல்லாத நாட்டில், மனிதனைச் சுட எப்படி அனுமதி கிடைத்தது? துப்பாக்கிச் சூடு என்பது திட்டமிட்ட படுகொலை. குழந்தைகளுடன் ஜனநாயக முறைப்படி போராடியவர்களை அரசே சுட்டுக் கொலை செய்துள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டும்." என்றனர்.
Video: Laxman