தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது அலகு விரிவாக்கப் பணிகளுக்கு அனுமதி பெற்றதை எதிர்த்தும், அனுமதி பெற்ற இடத்தில் தொடங்காமல் வேறு இடத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருவதா என்று கூறியும் பேராசிரியர் பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்பில் கூறியிருப்பதாவது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை 4 மாதங்களுக்குள் நடத்த வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.