10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் 97.18 சதவீதம்; நீலகிரி 95.20 சதவீதம் தேர்ச்சி

திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 97.18 சதவீதம் பேரும், நீலகிரி மாவட்டத்தில் 95.20 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 97.18 சதவீதம் பேரும், நீலகிரி மாவட்டத்தில் 95.20 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில்  94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 336 பள்ளிகளைச் சேர்ந்த 13,987 மாணவர்கள் மற்றும் 14,227 மாணவிகள் என மொத்தம் 28,214 பேர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதினர். இதில் 13,486 மாணவர்கள் மற்றும் 13,932 மாணவிகள் என 27,418 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 97.06 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 7-ஆம் இடத்தைப் பிடித்திருந்தது. இந்தாண்டு 97.18 சதவீதம் பெற்று தமிழகத்தில் அதே 7-வது இடத்தைத் தக்கவைத்துள்ளது.

நீலகிரி

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 95.20% சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 8,225 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,830 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மொத்தம் 2,745 பேர் தேர்வு எழுதினர். அதில், 2,487 பேர் தேர்ச்சி பெற்று, அரசுப் பள்ளிகளில் 90.60 சதவீதமாக தேர்ச்சி விகிதம் உள்ளது.



இந்த ஆண்டு 95.20 சதவீதம் தேர்ச்சி விகிதமாக உள்ள நிலையில், இது கடந்த ஆண்டை விட 0.11 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...