கோவை: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை இளையதலைமுறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர்.
கோவை: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை இளையதலைமுறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பினரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது :-
அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும், என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை கடந்த 21-ம் தேதி இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பு சார்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து மனுவாக அளித்தோம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை முடிவில் உள்ள சட்ட சிக்கல்களை பற்றியும் பள்ளி கல்வித்துறை விளக்கிய அமைச்சர்கள், இதற்குண்டான நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.
மேலும், மருத்துவ கல்வித்துறை, வனத் துறை, மீன் வளத்துறை, கால்நடைத் துறை, மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோரின் செயலாளர்களை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை மனுவை அளித்தோம். அவர்கள், நாங்கள் அளித்த மனுவை அமைச்சர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்தனர்.
5 சதவீதம் மட்டுமே உள்ள அரசு கல்லூரிகளில் 90 சதவீத தனியார் பள்ளி மாணவர்களே இடம்பிடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் மாதம் ரூ. 500-ஐ கூட கட்டணமாக செலுத்த முடியாத ஏழை மாணவர்களால் எவ்வாறு தனியார் கல்லூரிகளில் ரூ. 50,000 கட்டணம் கட்டி படிக்க முடியும்? இந்த கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் அரசை வலியுறுத்த வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பினரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது :-
அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும், என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை கடந்த 21-ம் தேதி இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பு சார்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து மனுவாக அளித்தோம்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை முடிவில் உள்ள சட்ட சிக்கல்களை பற்றியும் பள்ளி கல்வித்துறை விளக்கிய அமைச்சர்கள், இதற்குண்டான நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.
மேலும், மருத்துவ கல்வித்துறை, வனத் துறை, மீன் வளத்துறை, கால்நடைத் துறை, மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோரின் செயலாளர்களை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை மனுவை அளித்தோம். அவர்கள், நாங்கள் அளித்த மனுவை அமைச்சர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்தனர்.
5 சதவீதம் மட்டுமே உள்ள அரசு கல்லூரிகளில் 90 சதவீத தனியார் பள்ளி மாணவர்களே இடம்பிடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் மாதம் ரூ. 500-ஐ கூட கட்டணமாக செலுத்த முடியாத ஏழை மாணவர்களால் எவ்வாறு தனியார் கல்லூரிகளில் ரூ. 50,000 கட்டணம் கட்டி படிக்க முடியும்? இந்த கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் அரசை வலியுறுத்த வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.