அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை : கோவை இளையதலைமுறை அமைப்பினர் வலியுறுத்தல்

கோவை: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை இளையதலைமுறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர்.

கோவை: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை இளையதலைமுறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தனர். 

இது தொடர்பாக அந்த அமைப்பினரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது :- 

அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும், என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை கடந்த 21-ம் தேதி இளையதலைமுறை சமூக விழிப்புணர்வு அமைப்பு சார்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து மனுவாக அளித்தோம். 

அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை முடிவில் உள்ள சட்ட சிக்கல்களை பற்றியும் பள்ளி கல்வித்துறை விளக்கிய அமைச்சர்கள், இதற்குண்டான நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். 

மேலும், மருத்துவ கல்வித்துறை, வனத் துறை, மீன் வளத்துறை, கால்நடைத் துறை, மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோரின் செயலாளர்களை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை மனுவை அளித்தோம். அவர்கள், நாங்கள் அளித்த மனுவை அமைச்சர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்தனர். 

5 சதவீதம் மட்டுமே உள்ள அரசு கல்லூரிகளில் 90 சதவீத தனியார் பள்ளி மாணவர்களே இடம்பிடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் மாதம் ரூ. 500-ஐ கூட கட்டணமாக செலுத்த முடியாத ஏழை மாணவர்களால் எவ்வாறு தனியார் கல்லூரிகளில் ரூ. 50,000 கட்டணம் கட்டி படிக்க முடியும்? இந்த கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் அரசை வலியுறுத்த வேண்டுகிறோம். 

இவ்வாறு அந்த பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...