கோவை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து கோவையில் நேற்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து கோவையில் நேற்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அரசின் இந்த ஒடுக்குமுறையைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.
Video: Laxman

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அரசின் இந்த ஒடுக்குமுறையைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.
Video: Laxman