நீலகிரி: குன்னூரில் நேற்று நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓட்டப் பந்தய போட்டியில் மத்திய பிராந்திய அணி வெற்றி பெற்றது.
நீலகிரி: குன்னூரில் நேற்று நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓட்டப் பந்தய போட்டியில் மத்திய பிராந்திய அணி வெற்றி பெற்றது.

குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்குட்பட்ட தங்கராஜ் விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. ராணுவ விளையாட்டு கட்டுப்பட்டு வாரியத்தின் கோப்பைக்கான இந்த ஓட்ட பந்தயத்தில், தேசிய அளவிலான ஆறு குழுக்களில் கலந்து கொண்டது. ஒவ்வொரு குழுவிலும் 6 வீரர்கள் வீதம், 36 ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
ராணுவ வீரர்களின் வேகம், உடல் திறன் மற்றும் திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த போட்டி, வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதிகளில், 10 கி.மீ தூரம் நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்பட்டது.
இதில், மத்திய பிராந்திய அணியின் அனில் குமார் யாதவ், 31.56 நிமிடங்களில் வந்து முதலிடத்தையும், தென் பிராந்திய அணியின் கரன் சிங், 32 நிமிடங்களில் வந்து 2-வது இடத்தையும், மத்திய பிராந்திய அணியின் சுந்தர் சிங், 32.01 நிமிடங்களில் வந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், புள்ளிகள் கணக்கில் முதலிடத்தை மத்திய பிராந்திய அணி பெற்று வெற்றி கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் கமாண்டண்ட் சங்வான் பதக்கங்களை வழங்கியதுடன், முதலிடத்தைப் பெற்ற மத்திய பிராந்திய அணியினருக்கு வெற்றி கோப்பையையும் வழங்கினார்.

குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்குட்பட்ட தங்கராஜ் விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. ராணுவ விளையாட்டு கட்டுப்பட்டு வாரியத்தின் கோப்பைக்கான இந்த ஓட்ட பந்தயத்தில், தேசிய அளவிலான ஆறு குழுக்களில் கலந்து கொண்டது. ஒவ்வொரு குழுவிலும் 6 வீரர்கள் வீதம், 36 ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
ராணுவ வீரர்களின் வேகம், உடல் திறன் மற்றும் திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த போட்டி, வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதிகளில், 10 கி.மீ தூரம் நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்பட்டது.
இதில், மத்திய பிராந்திய அணியின் அனில் குமார் யாதவ், 31.56 நிமிடங்களில் வந்து முதலிடத்தையும், தென் பிராந்திய அணியின் கரன் சிங், 32 நிமிடங்களில் வந்து 2-வது இடத்தையும், மத்திய பிராந்திய அணியின் சுந்தர் சிங், 32.01 நிமிடங்களில் வந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், புள்ளிகள் கணக்கில் முதலிடத்தை மத்திய பிராந்திய அணி பெற்று வெற்றி கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் கமாண்டண்ட் சங்வான் பதக்கங்களை வழங்கியதுடன், முதலிடத்தைப் பெற்ற மத்திய பிராந்திய அணியினருக்கு வெற்றி கோப்பையையும் வழங்கினார்.