ராணுவ வீரர்களுக்கான ஓட்டப் பந்தய போட்டி ; மத்திய பிராந்திய அணி வெற்றி

நீலகிரி: குன்னூரில் நேற்று நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓட்டப் பந்தய போட்டியில் மத்திய பிராந்திய அணி வெற்றி பெற்றது.

நீலகிரி: குன்னூரில் நேற்று நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓட்டப் பந்தய போட்டியில் மத்திய பிராந்திய அணி வெற்றி பெற்றது.



 

குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்குட்பட்ட தங்கராஜ் விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. ராணுவ விளையாட்டு கட்டுப்பட்டு வாரியத்தின் கோப்பைக்கான இந்த ஓட்ட பந்தயத்தில், தேசிய அளவிலான ஆறு குழுக்களில் கலந்து கொண்டது. ஒவ்வொரு குழுவிலும் 6 வீரர்கள் வீதம், 36 ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். 

ராணுவ வீரர்களின் வேகம், உடல் திறன் மற்றும் திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த போட்டி, வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதிகளில், 10 கி.மீ தூரம் நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்பட்டது.

இதில், மத்திய பிராந்திய அணியின் அனில் குமார் யாதவ், 31.56 நிமிடங்களில் வந்து முதலிடத்தையும், தென் பிராந்திய அணியின் கரன் சிங், 32 நிமிடங்களில் வந்து 2-வது இடத்தையும், மத்திய பிராந்திய அணியின் சுந்தர் சிங், 32.01 நிமிடங்களில் வந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 

குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், புள்ளிகள் கணக்கில் முதலிடத்தை மத்திய பிராந்திய அணி பெற்று வெற்றி கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் கமாண்டண்ட் சங்வான் பதக்கங்களை வழங்கியதுடன், முதலிடத்தைப் பெற்ற மத்திய பிராந்திய அணியினருக்கு வெற்றி கோப்பையையும் வழங்கினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...