கோவையில் லஞ்சம் வாங்கிய வேளாண் இணை இயக்குனர் கைது
கோவை: வேளாண் இணை இயக்குனர் சுகுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.
புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் பொள்ளாச்சியில் உள்ள தனது 10 ஏக்கர் விவசாய நிலத்தை மனையடி நிலமாக மாற்ற என்.ஓ.சி (தடையில்லா சான்றிதழ்) பெற வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தை அணுகினார்.
இந்த நிலையில், விவசாய நிலத்தை மனையடி நிலமாக மாற்ற வேளாண் இணை இயக்குனர் ரூ.1.5 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அசோக் குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர், நேற்று மாலை தடாகம் சாலையில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், வேளாண் இணை இயக்குனர் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதேபோல், அவரது உதவியாளர் முருகனும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Video : Laxman
புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் பொள்ளாச்சியில் உள்ள தனது 10 ஏக்கர் விவசாய நிலத்தை மனையடி நிலமாக மாற்ற என்.ஓ.சி (தடையில்லா சான்றிதழ்) பெற வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தை அணுகினார்.
இந்த நிலையில், விவசாய நிலத்தை மனையடி நிலமாக மாற்ற வேளாண் இணை இயக்குனர் ரூ.1.5 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அசோக் குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர், நேற்று மாலை தடாகம் சாலையில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், வேளாண் இணை இயக்குனர் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதேபோல், அவரது உதவியாளர் முருகனும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Video : Laxman