பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு ; 94.5 சதவீதம் தேர்ச்சி

கோவை : தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்தில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவை : தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்தில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வினை தமிழகத்தில் இருந்து மட்டும் 4,74,340 மாணவர்கள், 4,76,057 மாணவிகள் என 9,50,397 பேர் எழுதினர். இதுதவிர, 50,743 பேர் தனித்தேர்வர்களாக தேர்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இன்று வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 

 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

5,584 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகள் 1,687 ஆகும். 2,06,796 பேர் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 



முதலிடம் 

சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 98.38 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 98.26 சதவீத தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. 

மாணவர்கள் அளித்திருந்த செல் போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் அனுப்பப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn. nic.in ஆகிய இணையதள முகவரிகள் மூலமாக தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...