கோவை : கோவையில் நடைபெற்ற பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டியில் உள்ளூர் வீரர் பாலபிரசாத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
கோவை : கோவையில் நடைபெற்ற பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டியில் உள்ளூர் வீரர் பாலபிரசாத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தயார் படுத்திக் கொள்ளும் வகையில், எம்இசிஓ மோட்டார் ஸ்போர்ட் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறந்த கார் பந்தய வீரர்களுக்கான கோடைகால போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, கோவையில் உள்ள கரிமோட்டார்ஸ் ஸ்பீடுவேயில் இந்த ஆண்டுக்கான 'பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டி' நடைபெற்றது. இதில், கோவை, பெங்களூரூ என நாடு முழுவதும் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இருதினங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உள்ளூர் வீரரான கோவையைச் சேர்ந்த பாலமுருகன் சாம்பியன் பட்டத்தை வென்றார். முதல் சுற்றில் 2-வது இடத்துடன் 91 புள்ளிகளைப் பெற்ற அவர், அடுத்த சுற்றில் சிறப்பாக செயல்பட்டதால் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தார். பெங்களூரூவைச் சேர்ந்த சோஹைல் 2-வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த வீரர் நிர்மல் உமாசங்கர் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தயார் படுத்திக் கொள்ளும் வகையில், எம்இசிஓ மோட்டார் ஸ்போர்ட் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறந்த கார் பந்தய வீரர்களுக்கான கோடைகால போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, கோவையில் உள்ள கரிமோட்டார்ஸ் ஸ்பீடுவேயில் இந்த ஆண்டுக்கான 'பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டி' நடைபெற்றது. இதில், கோவை, பெங்களூரூ என நாடு முழுவதும் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இருதினங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உள்ளூர் வீரரான கோவையைச் சேர்ந்த பாலமுருகன் சாம்பியன் பட்டத்தை வென்றார். முதல் சுற்றில் 2-வது இடத்துடன் 91 புள்ளிகளைப் பெற்ற அவர், அடுத்த சுற்றில் சிறப்பாக செயல்பட்டதால் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தார். பெங்களூரூவைச் சேர்ந்த சோஹைல் 2-வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த வீரர் நிர்மல் உமாசங்கர் 3-வது இடத்தையும் பிடித்தனர்.