நூற்றாண்டு காலத்தின் உச்சம் ; கோவையில் கொட்டி தீர்த்த கோடை மழை

கோவை : கோவையில் நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் 285 மி.மீ., மழை பெய்துள்ளது என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவையில் நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் 285 மி.மீ., மழை பெய்துள்ளது என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.



கோடை மழையின் தாக்கத்தால் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மரங்கள், செடிகள் என அனைத்து வகை தாவரங்களும் பச்சை பசேல் எனக் காட்சியளிக்கிறது. காட்டு தீ என சொல்லக்கூடிய பேராபத்திலிருந்தும் மேற்குதொடர்ச்சி மலை தப்பியது. இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கோவையில் கோடை மழை 130 மி.மீ எதிர்பார்த்த நிலையில், 285 மி.மீ மழை தற்போது வரை பெய்துள்ளது. கோடை காலம் இன்னும் முடியவில்லை, எனவே மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நூற்றாண்டு கால வரலாற்றில் ஒர் உச்சம்.

பொதுவாக மே மாதம் அக்னி வெயிலில் 66 மி.மீ., மழை மட்டுமே பெய்யும். ஆனால், இந்தாண்டு மே மாதம் மட்டும் 232 மி.மீ மழை பெய்துள்ளது. 2015-ம் ஆண்டு கோடை மழை 260 மி.மீ பதிவாகியிருந்தது. அதன்பின், 2018-ம் ஆண்டு தற்போது வரை 285 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வேளாண் பல்கலைக்கழக அறிவுரைப்படி, பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது வைத்திருந்ததால் அவர்களுக்கு மண் வளம் அதிகரித்துள்ளது.



மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் மரம், செடி, கொடி என அனைத்தும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. கோடை காலத்தில் வரும் வழக்கமான பிரச்சினையான காட்டு தீ மற்றும் வன விலங்குகள் ஊருக்குள் வரும் பிரச்சினை மழை நீரினால் குறைந்துள்ளது. கோவையைப் பொருத்தவரை கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு குறைவாகவே வெயில் பதிவாகியுள்ளது. இன்று அதிகபட்சமாக 36.5 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 23.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 4 முதல் 5 கி.மீ வேகம் வரை வீசி வருகிறது, இது அதிகரிக்க வாய்ப்புள்ளது," என்றார்.

"மழை நீரை வீணாக்காமல் கால்வாய்கள் தூர்வார வேண்டும். சாலையின் ஓரம் உள்ள பகுதிகளில் நீர் தேங்காதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாக்கடைகள் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். மரக்கிளைகள் மழையில் விழாமல் இருக்க அதனைத் தடுக்க வேண்டும், கொசு முட்டைகள் உற்பத்தியாகாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சமூக ஆர்வலர் அருள் ராஜ் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...