திருப்பூர் : திருப்பூர் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆண்டிப்பாளையம் பகுதியில் ஒட்டல் கடை நடத்தி வருபவர் சத்தியமூர்த்தி. இவர், தனது வீட்டிலிருந்து ஒட்டல் கடைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த இருவர் அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். இதனால், அச்சமடைந்த சத்தியமூர்த்தி கூச்சலிட்டுள்ளார்.
இதைக் கேட்டு உடனடியாக திரண்ட பொதுமக்கள், அவர்கள் இருவரையும் பிடித்து மத்திய காவல்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு, சங்கர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்த மத்திய காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.