சாலையில் நடந்து சென்றவர்களிடம் செல்போன் பறிக்க முயற்சி : இருவரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்

திருப்பூர் : திருப்பூர் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர் : திருப்பூர் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆண்டிப்பாளையம் பகுதியில் ஒட்டல் கடை நடத்தி வருபவர் சத்தியமூர்த்தி. இவர், தனது வீட்டிலிருந்து ஒட்டல் கடைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த இருவர் அவரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். இதனால், அச்சமடைந்த சத்தியமூர்த்தி கூச்சலிட்டுள்ளார். 

இதைக் கேட்டு உடனடியாக திரண்ட பொதுமக்கள், அவர்கள் இருவரையும் பிடித்து மத்திய காவல்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு, சங்கர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்த மத்திய காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...