நீலகிரி: மாணவ-மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு அவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்? என்பதை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்படுகிறது.
நீலகிரி: மாணவ-மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு அவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்? என்பதை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார்.
உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்டத்தில் உள்ள 260 பள்ளிகளின் மினி பேருந்துகள், பெரிய பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதி ராஜீ மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் பேருந்து இருக்கை, அவசரக் கால வழி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு சிலிண்டர், வேகக் கட்டுப்பாட்டு கருவி உட்பட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சோதனைகள் செய்யப்பட்டது.

இதில் முறையாக பராமரிக்கப்படாத பள்ளி பேருந்துகள் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஏற்கனவே கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார்.
உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்டத்தில் உள்ள 260 பள்ளிகளின் மினி பேருந்துகள், பெரிய பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதி ராஜீ மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் பேருந்து இருக்கை, அவசரக் கால வழி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு சிலிண்டர், வேகக் கட்டுப்பாட்டு கருவி உட்பட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சோதனைகள் செய்யப்பட்டது.

இதில் முறையாக பராமரிக்கப்படாத பள்ளி பேருந்துகள் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.