நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி: மாணவ-மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு அவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்? என்பதை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்படுகிறது.

நீலகிரி: மாணவ-மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு அவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்? என்பதை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் பள்ளி பேருந்துகள் சோதனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார்.

உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்டத்தில் உள்ள 260 பள்ளிகளின் மினி பேருந்துகள், பெரிய பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.



வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதி ராஜீ மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் பேருந்து இருக்கை, அவசரக் கால வழி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு சிலிண்டர், வேகக் கட்டுப்பாட்டு கருவி உட்பட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சோதனைகள் செய்யப்பட்டது.



இதில் முறையாக பராமரிக்கப்படாத பள்ளி பேருந்துகள் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...