வீட்டு வேலைக்காரப் பெண்ணை கொலை செய்த வழக்கில் அமைச்சர் உறவினரின் ஓட்டுநர் கைது

கோவை: சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே சந்தேகத்திற்கு இடமான சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது.


கோவை: சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே சந்தேகத்திற்கு இடமான சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார் சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்ததில் 36 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு அதில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த பெண் 3 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டதும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது. மேலும், காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஜெயந்தி என்ற பெண் காணமல் போனதும், தற்போது இறந்து கிடந்தது அவர் தான் என்பதும் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக, விசாரணை நடத்திய போது, இராமநாதபுரம் ஜோதி நகரைச் சேர்ந்த மணிவேல் என்பவர் பிடிபட்டார். இவர் சுகாதார துறை அமைச்சரின், உறவினர் வீட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த வீட்டு உரிமையாளர்கள் வெளியூர் சென்ற நிலையில், வீட்டுத் தூய்மை பணிக்காக வந்த ஜெயந்தியை கொன்ற மணிவேல், அவரை சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடைக்குள் வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தில், கொலைக்கான காரணம் கற்பழிப்பா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...