கோவை: கோவை மாவட்டம் மணக்கடவு பகுதியில் பழங்குடியினர் சுடுகாட்டினை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க கோரி பாரம்பாரிய இசை மற்றும் நடனத்துடன் வந்து பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் மணக்கடவு பகுதியில் பழங்குடியினர் சுடுகாட்டினை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க கோரி பாரம்பாரிய இசை மற்றும் நடனத்துடன் வந்து பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள மணக்கடவு பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது அம்மக்கள் தங்களது பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து, நடனமாடியபடி வந்து மனு அளித்தனர்.

மனுவில், அவர்கள் தங்கியுள்ள பகுதியில் பழங்குடியினருக்கு சொந்தமான சுடுகாட்டினை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதுதொடர்பாக, பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தங்களது சுடுகாட்டினை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
Video: Laxman