பிரிக்கால் நிர்வாகத்தை கண்டித்து குழந்தைகளுடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் உள்ள (பிரிக்கால்) தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் போக்கை கண்டித்து அதன் தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவையில் உள்ள (பிரிக்கால்) தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் போக்கை கண்டித்து அதன் தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் மின்சாதன உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், அந்த நிர்வாகம் கடந்த சில வருடங்களாக தொழிலாளர் விரோத போக்கை தொடர்ந்து கடைப்பிடிப்பதாக கூறி தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையானோர் அத்தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் நிலையில், பெரும்பான்மை இல்லாத சங்கமாக நிர்வாகம் மாற்ற முயல்வதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், விடுப்பு நாட்களுக்கான (ஈட்டாத விடுப்பு நாட்கள்) தொகையை நிர்வாகம் தர மறுப்பதாகவும், ஆண்டுதோறும் தந்த கல்வி உதவித்தொகை மற்றும் அலவன்ஸ் தொகையை சங்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை என்றும் கூறி தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் ரேஸ்கோர்ஸ் தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தனியார் நிறுவன அதிகாரிகளுடன் அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இன்று மாலை அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அழைத்ததையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். பேச்சு வார்த்தை வெற்றி பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடப் போவதாகவும், இல்லையேல் அடுத்தகட்ட ஆர்ப்பாட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...