மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி ரயில் பயணிகளுக்கு சைவ உணவுகளை மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி ரயில் பயணிகளுக்கு சைவ உணவுகளை மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுதந்திரப் போராட்டத் தியாகி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் 2019-ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபர் 2-ம் தேதி மற்றும் 2019, 2020 ஆண்டுகளில் அந்தத் தேதிகளில் ரயில் பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. காந்தியின் பிறந்த நாளில்தான் தூய்மை இந்தியா தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சபர்மதியில் இருந்து தூய்மை எக்ஸ்பிரஸ் (சுவாச்தா எக்ஸ்பிரஸ்) ரயில்களை காந்தியுடன் தொடர்புடைய பல்வேறு ரயில் நிலையங்களுக்கு இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்டத் தியாகி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் 2019-ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபர் 2-ம் தேதி மற்றும் 2019, 2020 ஆண்டுகளில் அந்தத் தேதிகளில் ரயில் பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. காந்தியின் பிறந்த நாளில்தான் தூய்மை இந்தியா தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சபர்மதியில் இருந்து தூய்மை எக்ஸ்பிரஸ் (சுவாச்தா எக்ஸ்பிரஸ்) ரயில்களை காந்தியுடன் தொடர்புடைய பல்வேறு ரயில் நிலையங்களுக்கு இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.