மேட்டுப்பாளையம்: உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக வந்தவர்களின் வேன் அன்னூர் அருகே மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மேட்டுப்பாளையம்: உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக வந்தவர்களின் வேன் அன்னூர் அருகே மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்டோர் உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக மினி வேன் மூலம் நேற்று இரவு புறப்பட்டு வந்தனர். இன்று காலை மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை வழியாக உதைக்கு வந்த வேன் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை அருகே இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் பயணித்த ரிஷி என்ற ஒன்பது வயது சிறுவன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து, இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பினர்.
மேலும், உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்டோர் உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக மினி வேன் மூலம் நேற்று இரவு புறப்பட்டு வந்தனர். இன்று காலை மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை வழியாக உதைக்கு வந்த வேன் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை அருகே இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் பயணித்த ரிஷி என்ற ஒன்பது வயது சிறுவன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து, இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பினர்.
மேலும், உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.