கோவை: கோடை கால சிறப்பு ஓவிய கண்காட்சி கோவை கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் நடைபெற்று வருகிறது.இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.
கோவை: கோடை கால சிறப்பு ஓவிய கண்காட்சி கோவை கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் நடைபெற்று வருகிறது.இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.

இது நாளையோடு நிறைவடைகிறது.இந்த கண்காட்சிக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கபடுவர்.இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் அக்ரலிக் பெயிண்டிங் மற்றும் ஆயில் பெயிண்டிங் மூலம் வரையப்பட்டுள்ளது.இதில் த்ரீடி ஓவியங்கள் மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளது.

இதில் ஓவியர் சத்தியவானனின் ஓவியங்களான சிங்கம் அமர்ந்திருப்பது போன்று இருக்கும் ஓவியம் பார்வையாளர்களை கவர்ந்திருந்தது.அதேபோல ஓவியர் சினோஜ் அவர்கள் வரைந்த 3டி தஞ்சாவூர் ஓவியம் சிலைபோல அமைந்திருந்தது.

அதேபோல ஜீவன் சக்திவேல் கைவண்ணத்தில் வரையப்பட்ட இயற்கை சார்ந்த ஓவியங்கள் மற்றும் ராம்நகர் போர்ட் போன்ற ஓவியங்கள் சிறந்த ஓவியங்களாக பார்வையாளர்களை மத்தியில் பேசப்பட்டது.

அதுமட்டுமல்லாது இதில், குதிரைகள் ஓடிவருவது போன்ற ஓவியம்,கதக்களி ஓவியம்,காளான் ஓவியம்,பட்டாம்பூச்சி ஓவியம்,இரண்டு மான்கள் உணவுக்காக நிற்பது போன்ற ஓவியம் என மொத்தம் 70க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.இந்த ஓவியங்கள் 700 ரூபாய் முதல் 15ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படும் என ஓவியர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஓவியர்.எம்.சினோஜ் கூறியதாவது:-
நான் மதுக்கரையில் வசித்து வருகிறேன்.சிறு வயதில் இருந்தே எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகம்.சுமார் 10 ஆண்டுகளாக ஓவியங்கள் வரைந்து வருகிறேன்.எனது படைப்பில் 3டி தஞ்சாவூர் ஓவியம் மிகவும் நான் ரசித்து வரைவது.

எங்களின் எண்ணத்தையும் மக்களின் விருப்பங்களையும் படைப்பதே எனது மகிழ்ச்சி, என்றார்.
