நபார்டு வங்கி - கொங்கு குளோபல் ஃபார்ம் இடையே உடன்பாடு

கோவை: கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் நிலவி வரும் நீர்பற்றாக்குறையை நீக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நபார்டு வங்கி மற்றும் கொங்கு குளோபல் ஃபார்ம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் நிலவி வரும் நீர்பற்றாக்குறையை நீக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நபார்டு வங்கி மற்றும் கொங்கு குளோபல் ஃபார்ம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். ஏனெனில்,  சேமித்து வைக்க வேண்டிய உபரி நீரில் 95 சதவீதத்தை பயன்படுத்தி விடுவதால், 386 பிளாக்குகளில் 139 பிளாக்குள் உள்ள நிலத்தடி நீர் சுரண்டப்பட்டுள்ளது. மேலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு, வனப்பகுதிகளி அழிப்பு, நிலத்தடி நீர் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாக கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூர், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 7 கொங்கு மாவட்டங்களில் கடும் வறட்சியும், தண்ணீர் பற்றாக்குறையும் தலைவிரித்தாடி வருகிறது.

இந்த நிலையில், கொங்கு மண்டல வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவது தொடர்பாக வர்த்தக வளாகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கொங்கு குளோபல் ஃபார்மின் உறுப்பினர்களான நிர்வாகி வனிதா மோகன், இயக்குநர்கள் கே. நல்லுசாமி, சுதாகர் பழனிசாமி, டி. நந்தகுமார் மற்றும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் தேசிய வங்கியின் (நபார்டு) துணை நிர்வாக இயக்குநர் அமலோர்பவந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, கொங்கு மண்டல மாவட்டங்களில் நிலவி வரும் நீர்பற்றாக்குறையை நீக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நபார்டு வங்கி மற்றும் கொங்கு குளோபல் ஃபார்ம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...