இனி பல்கலைக்கழங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது: தடை விதித்தது யு.ஜி.சி.,

உலக சுற்றுப்புறச் சூழல் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


உலக சுற்றுப்புறச் சூழல் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுப்புறச் சூழல் தினம் வரும் 5-ம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, ஐ.நா., சபை சார்பில் 'பிளாஸ்டிக் மாசுவை அகற்றுவோம்' என்ற கருத்தை முன்னிறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதித்து யு.ஜி.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :- பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் டீ கப்கள், உணவு எடுத்துச்செல்லும் பிளாஸ்டிக் கப்கள், பிளாஸ்டிக் பைகள், டிஸ்போசபிள் உணவு பரிமாறும் கப்கள், பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. இதுதவிர, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைக்க இது நல்ல சந்தர்ப்பம். மாணவர்கள் தங்களது அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் விரும்புகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தவிர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பள்ளி வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தடுக்கவும் பள்ளி நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோல, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...