3 மணிநேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் 200 கி.மீ கடந்து கொண்டு வரப்பட்ட உடலுறுப்பு: வெற்றிகரமாக நோயாளிக்கு பொருத்தி சாதனை

கோவை: மதுரையிலிருந்து 3 மணி நேரத்தில் சாலை வழியாகக் கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல், வெற்றிகரமாக நோயாளிக்குப் பொருத்தப்பட்டது.

கோவை: மதுரையிலிருந்து 3 மணி நேரத்தில் சாலை வழியாகக் கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட கல்லீரல், வெற்றிகரமாக நோயாளிக்குப் பொருத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வந்த செல்வி (45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 13-ம் தேதி கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி 18-ம் தேதியன்று மூளை சாவு ஏற்பட்டது. இந்த நிலையில், அவரது குடும்பத்தினர் செல்வியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

இதையடுத்து, மறுநாள் காலை அவரது உடல் உறுப்புகளில் ஒரு பகுதியான கல்லீரல், மதுரையிலிருந்து சாலை வழியாக கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு சுமார் 3 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. அங்கு, கல்லீரல் தேவைப்பட்ட நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. மதுரையிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவிற்கு சாலை வழியாக உடல் உறுப்பினை கொண்டு வருவதற்கு ஏதுவாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்ட போலீசார் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்தனர்.

இதுகுறித்து, கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவரும், மருத்துவருமான நல்ல.ஜி. பழனிசாமி கூறுகையில், "மதுரையிலிருந்து 3 மணி நேரத்தில் உறுப்பினை கொண்டு வருவது சாத்தியம் அல்ல. ஆனால், காவல்துறை உதவியுடன் இது சாத்தியமாகி உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்ட காவல்துறையினருக்கும், உடல் உறுப்புகளைத் தானமாக தர முன்வந்த செல்வியின் குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," எனக் கூறினார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...