பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி திட்டங்கள் ரத்து

கோவை : கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி வந்த தொலைதூர கல்வி திட்டங்களை ரத்து செய்வது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை :  கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி வந்த தொலைதூர கல்வி திட்டங்களை ரத்து செய்வது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் தொலைக்தூர கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் அடிப்படை வசதிகள், முறையான பாட திட்டங்கள் போன்றவை சரியாக நடைபெறவில்லை என கூறி இந்த மையங்களை மூட வேண்டும் என சுய நிதி கலை அறிவியல் கல்லூரி நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, நேற்று நடைபெற்ற ஆட்சிமன்ற கூடத்தில் தொலைதூரக் கல்வி மையங்களில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடத்துவதில்லை, சுயநிதி கல்லூரிகளின் முதல்வர்களின் ஓய்வு பெறும் வயது ஏற்கனவே முடிவு செய்தபடி தொடரும் என முடிவெடுக்கப்பட்டது.  மேலும், இந்த மையங்களை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுகட்ட தனியார் கல்லூரி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரம் தொலைதூரக் கல்வி மையங்களில் படித்து வரும் மாணவர்கள் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு படிப்புகளை தொடரலாம் என்றும் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...