தேனீகளை வளர்த்து வருமானத்தை உயர்த்துங்கள்..!

கோவை: உலக தேனீ தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தேனீ தினம் கொண்டாடப்பட்டது.


கோவை: உலக தேனீ தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தேனீ தினம் கொண்டாடப்பட்டது. 



ஆண்டுதோறும் மே மாதம் 19-ம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை சார்பில் இன்று மற்றும் நாளை தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. 



இந்த விழாவில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேனீ வளர்ப்பவர்கள் கலந்து கொண்டு, தேனீ பெட்டிகள், வளர்ப்பு உபகரணங்கள் மற்றும் தேன் கொண்டு தயாரித்து பல்வேறு உணவுப் பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். 



இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மைய தலைவர் ராமராஜு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், "தேனீகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. 



தேனீகள் இல்லாத ஒரு உலகத்தை நாம் கற்பனை செய்ய முடியாது. விவசாயிகள் தேனீகளை வளர்க்கலாம். இது கூடுதலாக லாபத்தை அளிப்பதோடு, விளைச்சலையும் அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி தேனீ வளர்ப்பு முறை குறித்து வேளாண் பல்கலை., சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்." என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...