கோவையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அரிய வாய்ப்பு: டி.என்.சி.ஏ., பயிற்சி முகாம் தொடக்கம்

கோவை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடை பயிற்சி முகாம் கோவையில் இன்று தொடங்கியது.

கோவை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடை பயிற்சி முகாம் கோவையில் இன்று தொடங்கியது.

பி.எஸ்.ஜி., ஐஎம்எஸ்ஆர் மைதானங்களில் 9-வது ஆண்டு கோடை பயிற்சி முகாம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இன்று முதல் மே 31-ம் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமின் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான சிறந்த இளம்வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) சார்பில் சான்றிதழ் பெற்ற சிறந்த பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்தப் பயிற்சிக்காக மாவட்ட அளவில் இருக்கும் அகடாமியில் இருந்து, ஒவ்வொரு பிரிவிலும் 45 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இது தொடர்பாக கோவை மாவட்ட 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கான தேர்வாளர் ஆர். வெங்கடேஷ் கூறுகையில், "வீரர்கள் பல்வேறு அகாடமிகளில் பயிற்சி பெற்று வரும் நிலையில், இதுபோன்ற அங்கீகாரம் பெற்ற முகாம்கள் அவர்களது வாழ்க்கையில் முக்கியமானதாகும். இது போன்ற முகாம்களில் ஆட்ட நுணுக்கங்களை அனுபவ வீரர்களிடம் இருந்து பெற்று, இளம் வீரர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்," என்றார்.



இந்தப் பயிற்சி முகாமில் இந்திய அணிக்காகவும், ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடி வரும் தமிழக கிரிக்கெட் வீரர்கள் அபினவ் முகுந்த் மற்றும் விஜய்சங்கர் ஆகியோர் இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...