நீலகிரி: 122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதகை சென்றடைந்தார்.
நீலகிரி: 122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதகை சென்றடைந்தார்.
மலை மாவட்டமான நீலகிரியில் கோடை விழா களைகட்டியுள்ளது. இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் நாளை (18-ம் தேதி) 122-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. 5 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதற்காக, கோவைக்கு விமானம் மூலம் வந்த அவர், காரின் மூலம் மேட்டுப்பாளையம், குஞ்சப்பனை மார்க்கமாக வழியாக கோத்தகிரிக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, கோத்தகிரி டானிங்டன் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், உதகைக்கு சென்ற அவருக்கு தொட்டபெட்டா மற்றும் சேரிங்கிராஸ் பகுதியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் தமிழகம் மாளிகைக்கு சென்றடைந்தார்.

மலை மாவட்டமான நீலகிரியில் கோடை விழா களைகட்டியுள்ளது. இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் நாளை (18-ம் தேதி) 122-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. 5 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதற்காக, கோவைக்கு விமானம் மூலம் வந்த அவர், காரின் மூலம் மேட்டுப்பாளையம், குஞ்சப்பனை மார்க்கமாக வழியாக கோத்தகிரிக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, கோத்தகிரி டானிங்டன் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், உதகைக்கு சென்ற அவருக்கு தொட்டபெட்டா மற்றும் சேரிங்கிராஸ் பகுதியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் தமிழகம் மாளிகைக்கு சென்றடைந்தார்.
