நீலகிரி: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா தேசிய நெடுஞ்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் கடந்த 15 நிமிடங்களில் சாலையில் மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா தேசிய நெடுஞ்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் கடந்த 15 நிமிடங்களில் சாலையில் மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. நேற்று மட்டும் உதகையில் 44 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் இன்று மதியம் உதகையில் மிதமான மழை பெய்தது.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள 122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் இருந்து கோத்தகிரி வழியாக காரின் மூலம் உதகைக்கு இன்று வந்தடைந்தார். இவரது கார், தொட்டபெட்டாவை கடந்த சுமார் 15 நிமிடங்களில் உதகை, கோத்தகிரி நெடுஞ்சாலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.
இதனால், முதலமைச்சரின் கார் அதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளாகாமல் தப்பியது. மரம் விழுந்த விபத்தினால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றிப் போக்குவரத்தை சீர் செய்தனர்.
