கோவையில் ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பட்டா உட்பிரிவு மாற்ற ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பட்டா உட்பிரிவு மாற்ற ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சூலூர் அருகே உள்ள வாரப்பட்டி பகுதியில் நில அளவையாளராக கதிரேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் வாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி 2.5 ஏக்கர் நிலத்தைப் பட்டா உட்பிரிவு மாற்ற கதிரேசனை அணுகியுள்ளார். அப்போது, பட்டா உட்பிரிவு மாற்ற விவசாயிடம் ரூ. 35 ஆயிரம் லஞ்சமாக தருமாறு நிலஅளவையாளர் கதிரேசன் கேட்டுள்ளார். முதற்கட்டமாக ரூ. 10 ஆயிரம் கொடுத்த விவசாயி, மேற்கொண்டு பணத்தை வழங்க விரும்பவில்லை.



எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விவசாயி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, அவர்களது அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொண்ட விவசாயி, நிலஅளவையாளர் கதிரேசனிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கதிரேசனை கையும், களவுமாகப் பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ. 20 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிங்காநல்லூரில் உள்ள கதிரேசனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...