கோவையில் போலீஸ் மியூசியமாக மாறிய ஹாமில்டன் கிளப்

கோவை: ஹாமில்டன் போலீஸ் கிளப்பானது கோவை இரயில் நிலையம் எதிரே எஃப்.ஏ. ஹாமில்டன் என்ற ஆங்கிலேய காவல் துறை அதிகாரியால் கடந்த 1918-ம் ஆண்டு 3,488 சதுர அடியில் உருவாக்கப்பட்டது. கடந்த 1951-ம் ஆண்டு இந்த கிளப்பில் 16 அறைகள், நூலகம், சமையலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. நாளடைவில் முறையான கவனிப்பின்றி பாழடைந்தது ஹாமில்டன் கிளப்.

கோவை: ஹாமில்டன் போலீஸ் கிளப்பானது கோவை இரயில் நிலையம் எதிரே எஃப்.ஏ. ஹாமில்டன் என்ற ஆங்கிலேய காவல் துறை அதிகாரியால் கடந்த 1918-ம் ஆண்டு 3,488 சதுர அடியில் உருவாக்கப்பட்டது. கடந்த 1951-ம் ஆண்டு இந்த கிளப்பில் 16 அறைகள், நூலகம், சமையலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. நாளடைவில் முறையான கவனிப்பின்றி பாழடைந்தது ஹாமில்டன் கிளப்.

அருங்காட்சியகம்

நீண்ட நெடுங்காலமாக பயன்பாடற்று கிடந்த இந்த கிளப்பை தமிழ்நாடு காவல் துறையினர் கடந்த 2016-ல் மறு சீரமைத்தனர்.

இந்த அருங்காட்சியகத்தில் காவல் துறையால் பயன்படுத்தப்பட்டு வந்த ஆயுதங்கள், சீருடைகள், மலையூர் மம்பட்டியான், வீரப்பன் ஆகியோர் பயன்படுத்திய துப்பாக்கிகள், விடுதலை புலிகள் பயன்படுத்திய நீர் மூழ்கிக் கப்பல்கள், இராணுவ வீரர்கள் பயன்படுத்திய உடைகள், வெடிகுண்டு கண்டுபிடிப்பு கருவிகள், உள்ளிட்ட பல அரிய மற்றும் சிறப்புக்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்று இருந்தது.



இன்றைய கால இளைஞர்கள் தமிழ்நாடு காவல் துறையை பற்றி தெரிந்து கொள்ள இந்த அருங்காட்சியகம் உதவுகிறது.



தற்போது புனரமைக்கப்பட்ட தமிழகத்தின் முதல் போலீஸ் மியூசியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் டி.ஜி.பி., ராஜேந்திரன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மேற்கு மண்டல ஐஜி.பாரி, கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ரயில் நிலையம் அருகே போலீசார் குவிக்கப்பட்டனர். அ.தி.மு.க., தொண்டர்களும் அங்கு திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...