மேட்டுப்பாளையம்: அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் விரைவில் இணைக்கப்படும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம்: அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் விரைவில் இணைக்கப்படும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உதகையில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ள மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கார் மூலம் உதகை சென்றார். அப்போது, அவருக்கு மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "கோவையில் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்டுள்ள பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால், கோவை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தொடங்கப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள் துரிதகதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது," என்றார். இதனைத் தொடர்ந்து, அவர் உதகைக்குப் புறப்பட்டு சென்றார்.