அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் விரைவில் இணைப்பு: மேட்டுப்பாளையத்தில் முதலமைச்சர் பேச்சு

மேட்டுப்பாளையம்: அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் விரைவில் இணைக்கப்படும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


மேட்டுப்பாளையம்: அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் விரைவில் இணைக்கப்படும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. உதகையில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ள மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கார் மூலம் உதகை சென்றார். அப்போது, அவருக்கு மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "கோவையில் அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்டுள்ள பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால், கோவை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தொடங்கப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள் துரிதகதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது," என்றார். இதனைத் தொடர்ந்து, அவர் உதகைக்குப் புறப்பட்டு சென்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...