சிறப்பாசிரியர்களை பணிநிரவல் செய்ய எதிர்ப்பு : மாணவர் சேர்க்கை சரியுமே தவிர அதிகரிக்காது என ஆசிரியர்கள் கருத்து

கோவை : அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சரிவை காரணம் காட்டி, சிறப்பாசிரியர்களை பணிநிரவல் (டிரான்ஸ்ஃபர்) செய்யும் முயற்சிக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


கோவை : அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சரிவை காரணம் காட்டி, சிறப்பாசிரியர்களை பணிநிரவல் (டிரான்ஸ்ஃபர்) செய்யும் முயற்சிக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் அரசு அனுமதித்த ஒவியம், தையல், இசை பாடங்களுக்கான சிறப்பாசிரியர்களின் பணியிடங்கள் 3,333 ஆகும். இதில், 2017-ம் ஆண்டின் நிலவரப்படி 2,454 சிறப்பாசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். 880 சிறப்பாசிரியர்களின் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. 

கோவை மாவட்டத்தில் 192 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 109 பள்ளிகளில், சிறப்பாசிரியர்கள் பணிபுரிகின்றனர். ராஜினாமா, பணி ஓய்வு காரணமாக, தற்போது 14 இடங்கள் காலியாக உள்ளன. மற்ற பள்ளிகளில், ஓவிய பாடத்துக்கு நிரந்தர ஆசிரியர் இல்லை எனவும் கூறப்படுக்கிறது. இப்பணியிடங்களுக்காக, கடந்தாண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், காலிப்பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இது குறித்து கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் கூறும் போது :- கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையால், பல பள்ளிகளில் ஓவிய பாடமே, காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 250 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பள்ளிகளில், பணிபுரியும் ஓவிய ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு வரும் கல்வியாண்டில் பணிநிரவல் செய்யப்படவுள்ளனர். அதேபோல, அப்பள்ளிகளில் இருந்து அந்தப் பணியிடமும் வரும் காலங்களில் நீக்கப்படும் எனக் கருதுகிறேன்.

பெரும்பாலான பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 83 சிறப்பாசிரியர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் பணி நிரவல் செய்யப்படவுள்ளனர். இதுபோன்ற திட்டங்களால் பல ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 2012-ம் ஆண்டு தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக 16,549 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள், என்றார்.



இதேபோல, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து ஓவிய ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "அரசுப்பள்ளி மாணவர்களின் தனித் திறமைகளை ஊக்குவிக்க, சிறப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். மாணவர் சேர்க்கை குறைவதற்கும், கலைப்பாட ஆசிரியர்களுக்கும் சம்பந்தமே இல்லை. 250 மாணவர்களுக்கு கீழ் படிக்கும், அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர்களை, பணிநிரவல் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இப்பள்ளிகளின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்காமல், ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதால், எந்தப் பலனும் இல்லை. இதன்மூலம், மேலும் மாணவர் சேர்க்கை சரியுமே தவிர அதிகரிக்காது' என்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் கூறுகையில், "சிறப்பாசிரியர்களை பணிநிரவல் செய்யும்படி எந்த அரசாணையும் இதுவரை வரவில்லை," எனக் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...