கோவையில் எஸ்.வி.சேகர் குறித்து கேள்விக்கு பதிலளிக்க மறுத்த டிஜிபி ராஜேந்திரன்

கோவை: எஸ்.வி.சேகர் கைது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் காவல் துறை இயக்குனர் ராஜேந்திரன் செய்தியாளர்களை தவிர்த்துவிட்டு சென்ற சம்பவம் பத்திரிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

கோவை: எஸ்.வி.சேகர் கைது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் காவல் துறை இயக்குனர் ராஜேந்திரன் செய்தியாளர்களை தவிர்த்துவிட்டு சென்ற சம்பவம் பத்திரிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

நடிகர் எஸ்.வி.சேகர் சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சங்கத்தினர் புகார் அளித்தனர். அவர் மீது பொது அமைதியை சீர்குலைத்தல், அவதூறு பரப்புதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ளவில்லை. தலைமறைவாக இருக்கும் அவர், சாதாரணமாக இல்ல விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், கோவையில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டி.ஜி.பி. ராஜேந்திரனும் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம், எஸ்.வி. சேகர் மீது கைது நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என பத்திரிக்கையாளர்கள் செய்தி எழுப்பினர். ஆனால், இதற்கு, பதிலளிக்க மறுத்த டி.ஜி.பி., அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை அதிருப்தியடையச் செய்தது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...