கோவை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரிபொருள் வரிச்சலுகை: முதலமைச்சர்

கோவை: கோவையில் இருந்து இரவு நேரங்களில் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கும் வகையில், எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் இருந்து இரவு நேரங்களில் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கும் வகையில், எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், இதுவரை இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், கோவைக்கு இணைப்பு முறையில் வரும் விமானங்கள் இரவில் இங்கேயே நிறுத்தப்பட்டு விடுகின்றன. இவ்வாறு நிறுத்தப்படும் விமானங்களை இரவில் இயக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, எரிபொருளுக்கான வரிச்சலுகை வழங்கினால் விமானங்களை இரவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது.



இந்நிலையில், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள காவல்துறை அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவைக்கு வந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "இரவு இங்கு நிறுத்தப்படும் இணைப்பு விமானங்களை பல்வேறு இந்திய நகரங்களுக்கு இயக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் விமான எரிபொருள் வரிச்சலுகை வழங்கப்பட உள்ளது, என்றார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், காவல்துறையினரின் செயல்பாடுகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட்டு அறிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதலமைச்சரின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அருங்காட்சியகம் அமைந்துள்ள ரயில் நிலையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக அடைக்கப்பட்டன.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...