கோவை : தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இடும் குப்பைகளால் நொய்யல் ஆற்றுப்படுகை பாழ்பட்டு வருகிறது.
கோவை : தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இடும் குப்பைகளால் நொய்யல் ஆற்றுப்படுகை பாழ்பட்டு வருகிறது.

கோவையில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் மாவட்டத்தில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த சூழலில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் நொய்யல் ஆற்றுப் படுகை பாழ்பட்டு வருகிறது. தெருநாய்களின் வாழ்விடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறிவருகிறது வற்றிப்போன நொய்யல் ஆற்றங்கரை.

காருண்யா நகர் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் வற்றாமல் பயணித்த நோய்யலின் கதி இது என்று நொந்து கொள்கின்றனர் ஆர்வலர்கள்.

இது குறித்து நொய்யல் பாதுகாப்பு குழு மற்றும் சிறுவாணி விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் கூறுகையில், "ஆற்றுப் படுகையில் இருந்த மரங்களை அகற்றுவதும் இந்த வறட்சிக்குக் காரணமாக உள்ளது. நொய்யல் ஆற்றங்கரை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. இது வரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பைகள் கொட்டப்படுவதோடு, நொய்யலில் கழிவு நீரும் கலக்கப்படுகிறது. இது வேதனையான ஒன்றாகும்." என்றார்.

கோவையில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் மாவட்டத்தில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த சூழலில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் நொய்யல் ஆற்றுப் படுகை பாழ்பட்டு வருகிறது. தெருநாய்களின் வாழ்விடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறிவருகிறது வற்றிப்போன நொய்யல் ஆற்றங்கரை.

காருண்யா நகர் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் வற்றாமல் பயணித்த நோய்யலின் கதி இது என்று நொந்து கொள்கின்றனர் ஆர்வலர்கள்.

இது குறித்து நொய்யல் பாதுகாப்பு குழு மற்றும் சிறுவாணி விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் கூறுகையில், "ஆற்றுப் படுகையில் இருந்த மரங்களை அகற்றுவதும் இந்த வறட்சிக்குக் காரணமாக உள்ளது. நொய்யல் ஆற்றங்கரை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. இது வரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பைகள் கொட்டப்படுவதோடு, நொய்யலில் கழிவு நீரும் கலக்கப்படுகிறது. இது வேதனையான ஒன்றாகும்." என்றார்.