கோவையில் போலீஸ் மியூசியத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

கோவை : தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.


கோவை : தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.



கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஹாமில்டன் கிளப்-ஐ தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ. 60 லட்சம் மதிப்பில் ஹாமில்டன் கிளப் புனரமைக்கப்பட்டது. 



இந்த அருங்காட்சியகத்தில் விடுதலை புலிகள் பயன்படுத்திய நீர் மூழ்கிக் கப்பல், விடுதலை புலிகளுக்களுக்காக ஆயுதங்கள் தயாரிக்கும் கடைசல் இயந்திரம், நகர்த்த கூடிய தீயணைப்பு இயந்திரம், ஆங்கிலேயரால் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், இந்திய அரசின் தரைப்படை, கப்பல் படை பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 



தமிழகத்தின் முதன் முறையாக அமைக்கப்பட்ட இந்த காவலர் அருங்காட்சியகம் இன்று திறப்பு விழா கண்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், டி.ஜி.பி., ராஜேந்திரன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மேற்கு மண்டல ஐ.ஜி.பாரி, கோவை சரக டி.ஐ.ஜி., கார்த்திகேயன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் என்று பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Video: Laxman

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...