கோவை : போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலை ரூ. 20 கோடி செலவில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை : போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலை ரூ. 20 கோடி செலவில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டம் உதகைக்குச் செல்ல நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதிலும் கோடை கால விடுமுறை சீசன் தொடங்கி விட்டால் இப்பாதையில் போக்குவரத்து இரு மடங்காக அதிகரித்து விடும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலைப்பாதையின் அகலம் குறைவாக இருப்பதாலும், இச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள் குறுகலாக இருப்பதாலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அந்த சாலையை சீர்ப்படுத்தும் விதமாக இச்சாலை பத்து மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேட்டுப்பாளையம் நகர எல்லையில் இருந்து மலையடிவாரமான கல்லார் வரையிலும், பின்னர் அங்கிருந்து குன்னூர் வரையிலுமான முப்பது கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கம் மற்றும் தரைப்பாலங்களை அகலப்படுத்தும் பணிக்காக ரூபாய் இருபது கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னும் நான்கு மாத காலத்திற்குள் இப்பணிகள் நிறைவடையும் என்றும், அடுத்த கோடை சீசனுக்கு இந்த மலைப்பாதையில் வாகன நெருக்கடியின்றி பயணம் மேற்கொள்ளலாம் என்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டம் உதகைக்குச் செல்ல நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதிலும் கோடை கால விடுமுறை சீசன் தொடங்கி விட்டால் இப்பாதையில் போக்குவரத்து இரு மடங்காக அதிகரித்து விடும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலைப்பாதையின் அகலம் குறைவாக இருப்பதாலும், இச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள் குறுகலாக இருப்பதாலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அந்த சாலையை சீர்ப்படுத்தும் விதமாக இச்சாலை பத்து மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேட்டுப்பாளையம் நகர எல்லையில் இருந்து மலையடிவாரமான கல்லார் வரையிலும், பின்னர் அங்கிருந்து குன்னூர் வரையிலுமான முப்பது கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கம் மற்றும் தரைப்பாலங்களை அகலப்படுத்தும் பணிக்காக ரூபாய் இருபது கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னும் நான்கு மாத காலத்திற்குள் இப்பணிகள் நிறைவடையும் என்றும், அடுத்த கோடை சீசனுக்கு இந்த மலைப்பாதையில் வாகன நெருக்கடியின்றி பயணம் மேற்கொள்ளலாம் என்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.